Sunday 25 October 2009

தனி நாடு

சமீப காலமாக பத்திரிக்கை மற்றும் ஊடகத செய்திகளை படித்தால் , தமிழ் ஈழ முகாம்களின் மோசமான நிலை , கவலையை அளிக்கிறது . முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் விடுதலை அடைந்தாலும் , தங்கள் இயல்பு நிலைக்கு வர பல காலம் ஆகலாம் என்று கூறப்படுவது மேலும் வேதனையளிககூடியதாக உள்ளது. எப்படியும் அடிப்படையில் இருந்து , அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உருவாக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் . இப்படி இருக்க உலகத்தில் உள்ள தமிழர் அனைவரும் ஒன்று கூடி உலகின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள ஒரு சிறு தீவை வாங்கி கொடுக்க வாய்ப்பு உள்ளதா? எப்படியும் அனைத்து கட்டுமானங்களும் அழிந்துவிட்டது , நாம் ஏன் நம் உழைப்பை நமக்கு என்ற இடத்தில் செலவிட்டு அதை உருவாக்க கூடாது. இன்றைய அமெரிக்காவும் , ஆஸ்திரேலியாவும் , மற்றும் பல நாடுகளும் அப்படித்தானே உருவானது.