Tuesday 19 May 2009

காமெடி கிங் கிங் மேக்கர் ஆன கதை

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் அஇஅதிமுக மற்றும் நிதிஷ் குமார் உடனான கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார் மேதகு காமெடி கிங் கூறினார். இதன் பின்னணி தோல்வி பயமாகவே தோன்றுகிறது. இரண்டு நாட்களுக்குபின் தமிழின துரோகிஉடனான கூட்டணி வெற்றி பெற்றவுடன் கிங் மேக்கர் என்று தனது பரிவாரங்களுடன் தம்பட்டம் அடித்துகொல்கிறார். இது ஒருபுறம் இருக்க நம் பா.சி எப்படி வென்றார் என்பது கூத்தாக இருக்கிறது. இதற்கு மன்னர் ஆட்சி மேல். மன்னர் எதுவும் தம்பட்டம் அடிக்காமல் தன் மகனையே முடிசூடி விடுவார் , ஆனால் இங்கே எதோ சாதனை செய்ததால் மன்னர் ஆகிறார் என்று நம்மை முட்டாள்கள் ஆக்குகிறார்கள். கும்பக் கும்மி அடிக்க எதுவாக கூட்டணி வேறு. உ . பி இல் நம் காமெடி கிங்கின் மூலை தான் என்று கூறுவது பேரரசுவின் கிளைமாக்ஸ் காமெடி போல் இருக்கிறது.

1 comment:

  1. எது எப்படியோ? ராஜீவ் காந்தி, தீவிரவாதம், சகோதர யுத்தம்னு ஏதேதோ சொல்லி 30 ஆண்டாக போராடி உருவாக்கிய தமிழீழத்தை மழையில் நனைந்த குரங்கு குருவிக்கூட்டை கலைத்தது மாதிரி கலைத்துவிட்டோம். வாழ்க தமிழினம். வாழ்க நம் தலைவர்கள். சீனாக்காரன் இலங்கையில் பட்டறையை போட்ட பின் ஏவும் ஏவுகணை தமிழ்நாட்டுக்காரன் தலையில் தான் முதலில் விழும் என்பதை மறக்கவேண்டாம். அன்றைக்கு தெரியும் புலிகளின் அருமை!

    ReplyDelete